Posts

Showing posts from July, 2017

ஒரு விடியல்- Oru Vidiyal

Image
ஒவ்வொரு  விடியலும்  சொல்கிறதே... உனக்காக  இன்னும்  ஒரு  நாள்  வாழ்வதற்க்கு  உள்ளது  என்று... புதிய  வெளிச்சம்  கூறுகிறதே... இருளிற்க்கு  பிறகு  வெளிச்சமும்  உள்ளது  என்று... சிறு  கல்  அடிகளால்  மரம்  சாய  கூடுமா... சிறு  தோல்விகளால்  மனம்  தளருந்து  போகலாமா... தேய்  பிறை  கண்டு  சோர்ந்து  விடலாமா... வளர்  பிறையும்  உண்டு  என  மறந்து  போகலாமா... தன்னம்பிக்கைகொண்டு     எழுந்து  வா... முயற்சிகளைக்கொண்டு  முன்னேற  வா ... ஒவ்வொரு  விடியலும்  சொல்கிறதே... உனக்காக  இன்னும்  ஒரு  நாள்  வாழ்வதற்க்கு  உள்ளது  என்று... புதிய  வெளிச்சம்  கூறுகிறதே... இருளிற்க்கு  பிறகு  வெளிச்சமும்  உள்ளது  என்று... சிறகுகள் கொண்ட  பறவைகளுக்கு உயரம் கண்டு பயம் ஏன்... நம்பிக்கைகொண்ட நெஞ்சத்திற்க்கு தோல்விகளைக்கொண்டு தயக்கம் ஏன்... நம்பிக்கை என வேர் உள்ளவரை மரம் சாயாது... குறிக்கோள்  கூறாக உள்ளவரை லட்சியம் மறையாது... தன்னம்பிக்கைகொண்டு     எழுந்து  வா... முயற்சிகளைக்கொண்டு  முன்னேற  வா ... சமூகம் ஏசும் சொற்களைக்கொண்டு வெற்றியை நோக்கி படிக்கலை அமைத்திடு...

Kaalam kadandha kadhal kadhai

Image
நரைத்த முடிகள் கூறிடுமா என் காதலின் வயதை...  கரை சேர்ந்த ஓடம் கூறிடுமா அலைகளின் தாக்கத்தை ...  காய்ந்த இதழ்கள் கூறிடுமா இதழ்களின் ஈரத்தை ...  இதழ்களின் அழுத்தம் கூறிடுமா நீ என்னை அணைத்த வேகத்தை ...  திருவில்லா கூறிடுமா நாம் கை கோர்த்து சென்ற கதைகளை ...  கண்ணீர்கள் கூறிடுமா உன்னை பிரிந்து தவிக்கும் கதைகளை ...  சேர்ந்து உலா வந்த தளங்கள் ...  சேர இயலாத காலங்கள் ...  அணைத்திட என்றும் நீ இல்லை ...  நினைவுகள் இன்றி நான் இல்லை ...  என்றும் மூச்சோடு நீ மட்டுமே ... Naraitha mudigal kooriduma en kaadhalin vayadhai...  Karai serundha odam kooriduma alayugalin thakkathai...  Kayindha idhalgal kooriduma idhalgalin eerathai...  Idhalgalin alutham kooriduma ne anaitha vegathai...  Thiruvilla kooriduma ne kai korthu..  endra kadhaigal...  Kanneergal kooriduma unnai pirindhu thavikkum kadhaigalai...  Serundhu ula vandha thalangal...  Sera iyalafha kalam...  Anaithida endrum ne illai...  Ninaivugal indri naan illai...  Endrum moochodu ne mattume...