ஒரு விடியல்- Oru Vidiyal
ஒவ்வொரு விடியலும் சொல்கிறதே... உனக்காக இன்னும் ஒரு நாள் வாழ்வதற்க்கு உள்ளது என்று... புதிய வெளிச்சம் கூறுகிறதே... இருளிற்க்கு பிறகு வெளிச்சமும் உள்ளது என்று... சிறு கல் அடிகளால் மரம் சாய கூடுமா... சிறு தோல்விகளால் மனம் தளருந்து போகலாமா... தேய் பிறை கண்டு சோர்ந்து விடலாமா... வளர் பிறையும் உண்டு என மறந்து போகலாமா... தன்னம்பிக்கைகொண்டு எழுந்து வா... முயற்சிகளைக்கொண்டு முன்னேற வா ... ஒவ்வொரு விடியலும் சொல்கிறதே... உனக்காக இன்னும் ஒரு நாள் வாழ்வதற்க்கு உள்ளது என்று... புதிய வெளிச்சம் கூறுகிறதே... இருளிற்க்கு பிறகு வெளிச்சமும் உள்ளது என்று... சிறகுகள் கொண்ட பறவைகளுக்கு உயரம் கண்டு பயம் ஏன்... நம்பிக்கைகொண்ட நெஞ்சத்திற்க்கு தோல்விகளைக்கொண்டு தயக்கம் ஏன்... நம்பிக்கை என வேர் உள்ளவரை மரம் சாயாது... குறிக்கோள் கூறாக உள்ளவரை லட்சியம் மறையாது... தன்னம்பிக்கைகொண்டு எழுந்து வா... முயற்சிகளைக்கொண்டு முன்னேற வா ... சமூகம் ஏசும் சொற்களைக்கொண்டு வெற்றியை நோக்கி படிக்கலை அமைத்திடு...
Comments
Post a Comment