Muttalgalin koottam naam..
ஒவ்வொருவரும் ஒரு கோழைகள்....
மனிதன் எனும் போர்வையை போர்த்தி நடுங்கும் கோழைகள்..
உன் கண்களுக்கு மாட்டின் வதைபடு தெரிகின்றது....
அதை தட்டி கேட்க ஒரு இயக்கத்தை உண்டாக்கவும் தெரிகின்றது....
முட்டாள் மனிதர்களே........
ஒரு பெண்ணின் கற்பை சூறையாடும் மிருகங்கள் தெரியவில்லையா???
ஒருத்தியின் கதறல் காதில் விழவில்லையா???
அவளின் உடலுடன் அவள் கதையும் மங்கிவிட்டதே -
அது உன் கண்களுக்குத் தான் படவில்லையா???
அவள் கண்ணீரின் ஆழம் புரியவில்லையா???
மிருகத்தை காக்க உருவான கூட்டமே….
மனிதப் போர்வையில் வேட்டையாடும் ஒரு மிருகத்தை தண்டிக்க முடியுமா உன்னால்???
ஒரு மிருகம் கூட தன் இனத்தைக் காப்பாற்ற போராடுகின்றது
நம் இனத்தை நாமே அழிக்கிறோமே….
பெண்ணின் தேகத்தை சீண்டியவனை ஒன்றும் செய்யமுடியவில்லை…
பிஞ்சு குழந்தைகள் கை ஏந்துகின்ற கொடுமைக்கு ஒரு தீர்வு இல்லை…
கற்பழிக்கப்படும் பெண்களின் வாழ்க்கைக்கு ஒரு பதில் இல்லை…
சட்டம் என்ற கோட்டையில் ஒரு நியாயம் இல்லை..
உனக்கு எதற்கு மிருகத்தின் மீது ஒரு கரிசனம்..
இதை தட்டி கேட்டால் நீ போராடலாம் மிருகத்தின் உரிமைக்கு..
இல்லையெனில் ஜடமாக வாழ்ந்துவிடு பிறரின் நன்மைக்கு……………………………….
Comments
Post a Comment